Sunday, March 28, 2010

செப்: 28
குட்டிம்மா இன்னிக்கு காலைல 6.28 க்கு நீ பிறந்தாய். நான் உன்ன பையனா இருக்கணும்னு நெனச்சேன் ஆனா பொன் குட்டிய பிறந்திட்ட. கொஞ்சம் வருத்தமா இருந்தது ஆனா உன் முகத்த பாத்ததும் அது காணாம போய்டுச்சு.. அம்மா நீ பொறந்து ஹாஸ்பிடல்ல இருந்த போது நிறைய மனசு கஷ்ட படர மாதிரி விஷ்யங்கள நடத்திட்டாரு உங்க அப்பா....அந்த சம்பவங்கள நான் என்னைக்குமே என் வாழ் நாள்-ல மறக்க முடியாது....அம்மாச்சி,மாமா,பெரியம்மா மற்றும் அம்மாவோட மொத்த குடும்பமும் அத மறக்கவே முடியாதும்மா...அதுனாலையோ என்னவோ உன்மேல எனக்கு ரொம்ப பாசம். அக்கா அஸ்வதா பிறந்தப்போ அதுக்கு கிடச்ச எந்த வரவேற்பும் உனக்கு கிடைக்காம போச்சு..ரொம்ப அழுதுருக்கேம்மா அம்மா அதுக்காக..

ஜன:27 இன்னிக்குதான் உன்ன முதல் முதலா சென்னைக்கு கூட்டிட்டு வந்த நாள்.

மார்ச்:27 இன்ன்க்குதான் உனக்கு முதல் சாப்பாடு குடுத்த நாள்.

No comments:

Post a Comment